Saturday, 23 November 2013

நான்...ஏன்?

அவள்...
என் உரு தெரியா
உருவத்தில்,
உறவாடியபோது
இன்பம் என்னை
வீழ்த்தியது!

உற்றுப் பார்த்த
அவளின்
கண்களுக்குள்ளே,
எனது உருவம்
சிரித்தபோது
எல்லையில்லா
உவகை கொண்டேன்!

உலகை மறந்து
அவளை நான்
தஞ்சமடைந்த போது
என்னை மறந்தேன்!

தேன் சுவை சொட்டும்
அவளின் இதழ் பருகி
கடித்தெடுத்த
இரத்தத்தை
என் நாவால்
வருடியபோது
ஏக்கம் மறந்தேன்!


அவளின்
பிஞ்சுக்கரங்கள்
என் நெஞ்சத்து
மயிர் நீவி
உழற்றியபோது
உடல் சிலிர்த்தேன்!

கை கால்கள்
கோர்த்து
உடலும் உயிரும்
ஒன்றாய் தழுவி
என்னை உரசியபோது
காலம் மறந்தேன்!

அவளின்
எல்லையில்லா
இனிய சொற்கள்
என்னை
கொள்ளை கொண்டபோது,
நாளுக்கு நாளாய்
பரிதவித்தேன்!

அவள்...
என் உள்ளத்தை
உரசிய
அவச்சொற்களை மட்டும், 
நான்...ஏன்?

No comments:

Post a Comment