Tuesday, 26 November 2013

மரணம்!

செடிகளின்
மரணம்
வருங்கால
சந்ததிகளுக்கு
உரமாய்!

உயிர்விடும்
தாவரங்கள்
மனிதனுக்கு
உணவாய்!

சிப்பியின்
மரணம்
முத்துக்களின்
தோன்றல்களாய்!

முகிலின்
மரணம்
மழையின்
வருகையாய்!


இரவின்
மரணம்
பளிச்சிடும்
பகலாய்!

விலங்குகளின்
மரணம்கூட
சக விலங்குகளுக்கு
உணவாய்!

மனிதா!
உன் மரணம்
யாருக்கு
உதவியாய்?
கேள்விக்கு பதில்...
சுழியாய்!

No comments:

Post a Comment