Friday, 8 November 2013

மூடு பனி...

சிறு மணல்
வீடு கட்டி,
அலை வந்து
அடித்து போகும்
நிலையில்
ஏங்கி நிற்கும்
மகிழ்ச்சி!


முத்தெடுக்க
கடலில் மூழ்கி,
சிப்பி கிடைத்தாலும்
முத்து இருக்குமா?
என்ற தவிப்பு!


காகிதத்தில்
செய்த கப்பல்
என்று தெரிந்தும்,
கரை சேருமா?
என்ற எதிர்பார்ப்பு!


வண்ணமிகு
வானவில்
வானத்தில்
நிரந்தரமாய்
நிலைக்குமா?
என்ற பரிதவிப்பு!

இவையாவும்
கோடையில்
தோன்றும்
மூடுபனிகள்!



No comments:

Post a Comment