Wednesday, 6 November 2013

தூரத்து பச்சை!

கண் சிமிட்டி
மின் மினுக்கும்
நட்சத்திரங்களின்
அழகை...
நிலவிடம்
வினவினேன்!
அது எள்ளி
நகைத்தது!

ஆடும் மயிலின்
அழகை...
வான் கோழியிடம்
மெச்சினேன்!
அது அலுத்து
கொண்டது!


பசுமையின்
இனிமையை...
மலையிடம்
கூறினேன்!
மலை சிரித்து
கொண்டது!


மலருக்கும்
வண்டுக்கும் உள்ள
உறவை...
தேனியிடம்
புகழ்ந்தேன்!
தேனி அலட்சியம்
செய்தது!

அருகருகே
பச்சையும்
கசக்கும்!

No comments:

Post a Comment