வெட்டிய நகம்
வளரத் துடிக்கும்!
விலகிய நீர்
சேரத் துடிக்கும்!
விண்ணை விட்டு
மழையாய் வந்த
மேகம்...
மீண்டும் ஆவியாய்
மேகமாய்!
பட்டமரம்
தழைப்பதும்,
பாலை நிலத்தில்
பூ பூப்பதும்
இயலாத ஒன்று!
காய்ந்த சேறு
சூடு கண்டால்,
செங்கல்லாய் மாறும்!
ஒட்டியும்,உழன்றும்,
ஒன்றற கலந்தும்,
சிலராய், தனியாய்
கணக்காய்...
ஒதுங்கிவிடும்
உறவுகளை,
என் இதயத்தில்
சுரம் மீட்ட நினைத்த
எனக்கு வெட்கம்!
இனியாவது
இணையுமா?
பிரிந்த உறவு?
வளரத் துடிக்கும்!
விலகிய நீர்
சேரத் துடிக்கும்!
விண்ணை விட்டு
மழையாய் வந்த
மேகம்...
மீண்டும் ஆவியாய்
மேகமாய்!
பட்டமரம்
தழைப்பதும்,
பாலை நிலத்தில்
பூ பூப்பதும்
இயலாத ஒன்று!
காய்ந்த சேறு
சூடு கண்டால்,
செங்கல்லாய் மாறும்!
ஒட்டியும்,உழன்றும்,
ஒன்றற கலந்தும்,
சிலராய், தனியாய்
கணக்காய்...
ஒதுங்கிவிடும்
உறவுகளை,
என் இதயத்தில்
சுரம் மீட்ட நினைத்த
எனக்கு வெட்கம்!
இனியாவது
இணையுமா?
பிரிந்த உறவு?

No comments:
Post a Comment