Thursday, 7 November 2013

கருப்பு வெள்ளை!

மனித நேயத்தின்
உன்னத மாற்றங்கள்!
கனவுகள் கூட
கருப்பு வெள்ளை!


எண்ணச்சிதறலில்
வண்ணச் சிறகுகள்!
வரவுகள் இல்லா
வாழ்க்கை செலவுகள்!
பறக்க முயன்றும்
படுதோல்விகள்!


தளிர்விடும் காலம்
இயற்கையின்
கோணல்...
உலகம் தெரியாமல்
வாழ்ந்த நான்,
முதல் முதலாய்
இவ்வுலகத்தை
உற்று நோக்குகிறேன்!


என் கண்களுக்கு
இனியாவது
புத்தொளி
தெரியட்டும்!

No comments:

Post a Comment