Thursday, 31 October 2013

புதுவரவு!

குப்பை
மேட்டுக்குள்
குறி தவறிய
குண்டுமணி!

சிந்தனை
கோபுரத்தின்
வழிதவறிய
கலசம்!

மெருகு
சேர்த்த
பின்னும்
கசங்கிய
கருக்கள்!

அழுகிய
பின்னும்
அழகு தரும்
அவசரப் பூக்கள்!










சோகத்திலும்
செவிக்கு கிடைத்த
இனிய பாட்டு!

நாகரிகம்
வளர்ந்த
பின்னும்
அழியாத
மண் வாசனை!

எண்ணற்ற
சறுக்கல்களில்
உயர்ந்த வாழ்வு!

வாழ்க்கை
என்னும்
புத்தகத்தில்
இடம் பெறாத
அவளின்
புது வரவு!

No comments:

Post a Comment