Saturday, 5 October 2013

தெரு விளக்கு!

எனக்குள்
உயிராய்,
குருதியாய்
கலந்தபின்...
எனக்கு கிடைத்த
புத்தொளி என்று
பெருமிதம்
கொண்டேன்!


அந்த ஒளி
வெள்ளத்தில்,
எல்லையில்லா
மகிழ்ச்சி
கண்டேன்!

அவளோ...
நான் உனக்கு மட்டும்
விளக்கல்ல...
தெரு விளக்கு
என்றாள்?

No comments:

Post a Comment