Wednesday, 2 October 2013

என்னை ஒதுக்கிவிட...

உலகின்
மனிதர்களே!
நான் அன்புக்காக
ஏங்கும் மனிதனா?
இல்லை பற்றற்ற
மிருகமா?
எதையும் சிந்திக்காத
நடை பிம்பமா?
அறிவுப் பசிக்கு
அலையும்
பைத்தியமா?


உங்களில்
யார் என்னை
புரிந்து கொள்வீர்?
என்னை ஒதுக்கிவிட
நினைத்து...
ஒதுங்கிவிடாதீர்!

அதன் பின்
ஒரு உண்மையான
அன்பை...
இழந்து விடுவீர்கள்!

No comments:

Post a Comment