கருமைமிகு
மேகக் கூட்டத்தில்
என்னை
நுழைத்துக் கொண்டேன்!
எனக்கு மூச்சுத் திணறலா?
இல்லை...
குளிர்ச்சியின் இனிமை!
அவளின் கல் மனதில்
உளி கொண்டு
சிற்பம் வடித்தேன்!
தேய்ந்தது உளியா?
இல்லை...
மலர்ந்தது காதல்
என்னும் உயிரோவியம்!
அவளின் செந்தாமரை
முகத்தை உற்று
நோக்கினேன்!
எனக்கு மயக்கமா?
இல்லை அவளின் தாகம்!
பூர்வீகம் இல்லாத
புதிய கற்பனை
புத்தகம் அவள்!
என் மனதுக்குள்
துள்ளி விளையாடும்
கலை மான் அவள்!
அவள் தரும்
இன்னல்கள்...?

No comments:
Post a Comment