Thursday, 17 October 2013

நீராய்...

அருவி நீராய்
அவள்...
நான் குளிர்ச்சியாய்
குளித்து முடித்தேன்!

ஆற்று நீராய்
அவள்...
நான் மகிழ்ச்சியாய்
நீந்தி களித்தேன்!


குளத்து நீராய்
அவள்...
நான் முதிர்ச்சியாய்
மூழ்கி திளைத்தேன்!

ஆனால்!
கடல் நீராய்
அவள்...
சற்று நிதானித்து
உப்பின் சுவையை
இனிமையாக்கி
கொண்டேன்!

இப்போது
நான்...
அவளுடன்
இனிமையாய்!

No comments:

Post a Comment