Thursday, 10 October 2013

இனிக்காது!

அழகு நடை
பயிலும் அன்னமே!
உனக்கு இனி குரலும்
இருந்துவிட்டால்?










கம்பீர காட்சி தரும்
அல்லி மலரே!
உன்னை பெண்கள்
கூந்தலில்
சூடிக்கொண்டால்?










மென்மையில்
மேன்மை கொண்ட
வெண் புறாவே!
உனக்கு மயில் போன்று
தோகை இருந்துவிட்டால்?


காட்டுக்கு அரசனாய்
பயம் காட்டும் சிங்கமே!
நீ என்றாவது
ஆடல் நிகழ்த்தினால்?


எட்டாத தொலைவில்
விண்ணில் உலா வரும்
வெண்ணிலவே!
நீ என்றாவது காதலர்
கைகளில் கன நேரம்
கிடைத்துவிட்டால்?


கேள்விகளின்
விடைகள் என்றென்றும்
இனிக்காது!
இயற்கை மாற்றம்
அழகு பெறாது!

No comments:

Post a Comment