Thursday, 24 October 2013

சீற்றம்...

செந்தூரப்பூவின்
தெவிட்டாத வாசம்!
இனமறியா வேதனை
என்றென்றும் வீசும்!

தனித்த... அவளின்
மூச்சுக்காற்றில்
வெப்பமறியா
தவிப்பிலும்...


உடல் இச்சையின்
இன்பமறியா
துடிப்பிலும்...

அவளின்...
நிழலை,
உயிராய் நினைத்து,
என் அன்பு முத்தம்!

ஆனால்...
அவளின் பிரிவு,
வாட்டும் தனிமை,
முடங்கிய காதல்
மோகமெல்லாம்,
இயற்கையின்
சீற்றம்!

No comments:

Post a Comment