Sunday, 13 October 2013

தழுவல்...

நீ துள்ளிய
துள்ளலில்
துவண்ட...
என் இதயம்,
என் இச்சையின்
உயிர்மூச்சில்,
உரமற்ற செயலாய்,
மூன்றாம் பிறையாய்
தோன்றி மறைந்தது!


உன்னை...
காற்றாய் தழுவி
இனிமை கண்டேன்
கனவில்!
உணர்வில் நாம்
ஒன்று சேரும்
நாள் எப்போது?

No comments:

Post a Comment