என் கவிதை
வரிகளின்
கற்பனையை,
என் நெஞ்சத்தில்
வடித்தெடுத்த
ஓலங்களை,
என்னுள்
உரசி இரசித்த
உயிர்மூச்சை,
உருவமில்லா
இனிமையை,
அவளின்...
உள்ளம் தீண்டவா
இழக்க வேண்டும்!
கற்பனைகள்...
வெளியுலகின்
நிழல்கள்!
அதனை
எனக்கு மட்டும்
சொந்தமாக்கியது
சுயநலம்!
அனைவரும்
ருசிக்கும்
கற்பனையை
மூடி மறைப்பது
எங்ஙனம்
நியாயம்!
எனது
கவிதைகளையும்
என்னையும்,
இயற்கையே!
உனக்கு
படைக்கிறேன்!
உனதாக்கிக்கொள்!
இல்லையேல்...
என்னைக் கொல்
நான் தேவையில்லை
இவ்வுலகிற்கு!
வரிகளின்
கற்பனையை,
என் நெஞ்சத்தில்
வடித்தெடுத்த
ஓலங்களை,
என்னுள்
உரசி இரசித்த
உயிர்மூச்சை,
உருவமில்லா
இனிமையை,
அவளின்...
உள்ளம் தீண்டவா
இழக்க வேண்டும்!
கற்பனைகள்...
வெளியுலகின்
நிழல்கள்!
அதனை
எனக்கு மட்டும்
சொந்தமாக்கியது
சுயநலம்!
அனைவரும்
ருசிக்கும்
கற்பனையை
மூடி மறைப்பது
எங்ஙனம்
நியாயம்!
எனது
கவிதைகளையும்
என்னையும்,
இயற்கையே!
உனக்கு
படைக்கிறேன்!
உனதாக்கிக்கொள்!
இல்லையேல்...
என்னைக் கொல்
நான் தேவையில்லை
இவ்வுலகிற்கு!


No comments:
Post a Comment