Saturday, 12 October 2013

உயிருடன்...

நீ உறங்கிய
காலம் முடிந்து,
இன்னலின் வேகம்
குறைந்து,
இனிமை பல
எனக்கு தந்து,
என் சோக
முகத்துக்கு
சுகம் தந்த போது...


நீ கொண்டு வந்த
பனிக் குடங்களின்
ஈர சிலிர்ப்பை,
காதலின்
பரிதவிப்பை,
உணர்ச்சித் தீயை,
அனுபவித்த நான்!
இறந்த பின்னும்
உயிருடன் வாழும்
காதலனாய்...
மயங்கினேன்!

No comments:

Post a Comment