யார் தமிழன்?
என்று ஆராய்ந்து,
எந்த தலைவன்
தமிழன் என்று
கேலி பேசி,
மண்ணுக்கு
சொந்த
தமிழனை
சோம்பலாக்கி,
காலங்காலமாய்
வாழ்ந்து வந்த
ஈழத் தமிழர்
எண்ணற்றோரை
இழந்துவிட்டோம்!
மந்த புத்தியால்
மயங்கி கிடக்கும்
தமிழனே!
உனது புலி போன்ற
போர் குணம்
எங்கே?
காளையை அடக்கி
இல்வாழ்வு ஏற்ற
உன் வீரம் எங்கே?
நெஞ்சில் விழுப்புண்
ஏற்கும் துணிவு
எங்கே?
இவை யாவும்
புற நானூற்றுக்கு
மட்டும்...
சொந்தமாக்கிவிட்டு
தூங்கிவிட்டாயா?
தமிழனே!
தொப்புள் கொடி
உறவுகள்...
என்பதால் தான்,
தாய் மண்ணின்
உறவை,
துண்டித்து
மறந்தாயா?
உலகத் தமிழர்கள்
உயிருக்கும் மேலான
சொந்தங்கள் என்று
இனியாவது சொல்!
தமிழனே!
நமது உறவுகளை,
தலைவர்கள்
மட்டும்தான்
காப்பாற்ற
வேண்டுமா?
தமிழர்கள்
அனைவரும்
புயலெனப் புறப்படு
ஈழம் நோக்கி!
நமக்கு ஆயுதம்
தேவையில்லை!
முடிந்தால் ஈழத்தை
மீட்போம்!
இல்லையேல்
நாமும்...
உயிர்கொடுப்போம்!
தமிழனே!
நீ கிளர்ந்து எழு!
தலைவர்கள்
உன்னை தேடி
வருவார்கள்!
என்று ஆராய்ந்து,
எந்த தலைவன்
தமிழன் என்று
கேலி பேசி,
மண்ணுக்கு
சொந்த
தமிழனை
சோம்பலாக்கி,
காலங்காலமாய்
வாழ்ந்து வந்த
ஈழத் தமிழர்
எண்ணற்றோரை
இழந்துவிட்டோம்!
மந்த புத்தியால்
மயங்கி கிடக்கும்
தமிழனே!
உனது புலி போன்ற
போர் குணம்
எங்கே?
காளையை அடக்கி
இல்வாழ்வு ஏற்ற
உன் வீரம் எங்கே?
நெஞ்சில் விழுப்புண்
ஏற்கும் துணிவு
எங்கே?
இவை யாவும்
புற நானூற்றுக்கு
மட்டும்...
சொந்தமாக்கிவிட்டு
தூங்கிவிட்டாயா?
தமிழனே!
தொப்புள் கொடி
உறவுகள்...
என்பதால் தான்,
தாய் மண்ணின்
உறவை,
துண்டித்து
மறந்தாயா?
உலகத் தமிழர்கள்
உயிருக்கும் மேலான
சொந்தங்கள் என்று
இனியாவது சொல்!
தமிழனே!
நமது உறவுகளை,
தலைவர்கள்
மட்டும்தான்
காப்பாற்ற
வேண்டுமா?
தமிழர்கள்
அனைவரும்
புயலெனப் புறப்படு
ஈழம் நோக்கி!
நமக்கு ஆயுதம்
தேவையில்லை!
முடிந்தால் ஈழத்தை
மீட்போம்!
இல்லையேல்
நாமும்...
உயிர்கொடுப்போம்!
தமிழனே!
நீ கிளர்ந்து எழு!
தலைவர்கள்
உன்னை தேடி
வருவார்கள்!
.jpg)
.jpg)
No comments:
Post a Comment