Saturday, 11 May 2013

தாழ்மையின் முனகல்கள்!

வைரம்
மின்னுவதை
எண்ணி,
கரித்துண்டுகள்
கலங்கினால்...

செந்தாமரையின்
புனிதம் எண்ணி
சேற்று மண்
பெருமூச்சு
விட்டால்...

தேனின்
உயர்வு எண்ணி
தேனிக்கள்
கொந்தளித்தால்...

ஊற்று நீரின்
உயர்வு எண்ணி
ஊற்றுக்கண்
வருத்தம்
கொண்டால்...

கனியின்
சுவையை எண்ணி
பழ மரங்கள்
ஏங்கினால்...

உயர்வுகளின்
பெருமை எண்ணி
அடித்தலங்கள்
பொறாமை
கொண்டால்...

அழிவின் காலம்
ஆரவாரம் செய்யும்!
உயர்வுகளை
அடித்தோன்றல்கள்
அசைக்க நினைத்தால்
அற்பத்தனம்!

பிறந்த பெருமை
ஒரு போதும்
மறைவதில்லை!
மனிதனே!
மாற்றானின்
உயர்வுக்கு
பொறாமை
கொள்ளாதே!

உனது முயற்சிக்கு
அடித்தளம் கட்டு!
நீ உயர்வாய்!

No comments:

Post a Comment