கண்ணீராய்...
செடிக்குள்ளே
புகுந்து
இளந்தளிராய்,
பூவாய்,
கனியாய்,
மாறி...
திடிரென்று
ஆவியாய்
மறைந்து,
மழையாய்,
தெள்ளமுதாய்,
தெளிநீராய்
மாறி...
எனக்குள்ளே
புகுந்து
செங்குருதியாய்,
சிறுநீராய்,
வியர்வையாய்
மாறி...
மனித
உணர்வுக்குள்
சிக்கி,
சீரழிந்து,
கண்ணீராய்
மாறும் நீ...
வெறும்
தண்ணீர்!
No comments:
Post a Comment