Tuesday, 28 May 2013

வீரத்தமிழ் மகள்!

தொடை நடுங்கி
சிக்கலாய்
சில காலம்
தவித்த தன்மானம்!

வீறுகொண்டு
விரைவாய் எழுந்து
சாத்திவைத்த
அரிவாளை
சட்டென்று எடுத்தாள்!


நேற்று பிறந்த
பெண் மகவை
கள்ளிப்பால் கொடுக்க,
பிடுங்க வந்த
கணவணை
வெட்டி சாய்த்தாள்!

சிரித்துக்கொண்டே
சிறை வாசம்!
சின்ன குழந்தைக்கு
சிறப்பாய் ஒரு...
முத்தம்!

இனியாவது
பெண்ணினம்
தழைக்கட்டும்!

No comments:

Post a Comment