Monday, 27 May 2013

சிறைக்கு பின்னும்!

தமிழே!
ஊழ்வினையின்
ஓரத்தில்,
நெஞ்சில் உரமற்று
நிற்கும் அவன்...

உற்சாகத்தின்
கெடுபிடியில்
உன்னை
பல வகையில்
போற்றிப் பாடும்
இளம் கவிஞன்!


நெஞ்சில் மட்டும்
நேர்மை நிறுத்தி,
உலகின் வஞ்சத்தில்
சிக்கி தவிக்கும்
தடைமிகுந்த
மனிதன்!

இருப்பினும்...
சிறைக்கு பின்னும்
சிந்தனை செய்து,
உன்னை செல்லமாய்
கட்டியணைக்க
துடிக்கும்
காதலன்!

No comments:

Post a Comment