Friday, 3 May 2013

இரண்டாம் சோகம்!

படபடக்கும்
நெஞ்சத்தில்
பஞ்சனை
விரித்தேன்!

நான்...
இரவு நேரத்தின்
இனிமை எண்ணி
ஆழ்ந்து உறங்கினேன்!

ஓ!
காவலுக்கு நின்ற
சோக நினைவுகள்
எங்கே?

என் புதியக் காதலின்
புதுமைத் தென்றலால்
ஓரமாய்...
விலகிச் சென்றதோ?

இல்லை இல்லை
சோக நினைவுகளே!
காத்திருங்கள்!

என் புதியக்காதலின்
இறுதியில்
இரு மடங்காய்
சோகம் பரிமாறலாம்!

No comments:

Post a Comment