Friday, 17 May 2013

சண்டை!

கரித்துண்டுகளின்
கிறுக்கல்கள்,
உணர்ச்சிகளின்
ஓங்கல்கள்,
கருவின் இருளில்
அவசரமாய்...
முளைத்த ஓவியம்,
மனித உடலுக்குள்
சிறியதாய்
ஒரு சண்டை!

தன்னிறைவு
எட்டிப்பார்க்கிறது,
கரடு முரடாய்
முயற்சி!
சிதறுகிறது சிற்பம்...
உடல் உறுப்புகளின்
தூண்டல்கள்,
உள்ளுக்குள்ளே
பெரும்புயல்,
வெளியே வந்தது
பனியில் நனைந்த
ரோசாப்பூ!
இப்போதும்...
உடலுக்குள்
பெரிய சண்டை!
.

No comments:

Post a Comment