Wednesday, 25 September 2013

ஆனந்தக் கண்ணீர்!

புதிர் போடும்
புதிய நிலா
அவள்!

எதிர்ப்பு பேசும்
ஏகாந்தக்காரி
அவள்!

நான்...
ரோசவினும்
மென்மையானவன்
என்றேன்!
அவள்...
உங்களுக்குள்
முற்களை
பார்க்கிறேன்
என்றாள்!


நிலவாய் நான்...
குளிர் தருவேன்
என்றேன்!
பகல் பொழுது
வராதா?
என்றாள்!

உயிருக்கு
மூச்சாய் நான்...
இருப்பேன்
என்றேன்!
காற்றில் கூட
நஞ்சு உண்டு
என்றாள்!

ஒரு சில நிமிட
கண்ணீர் துளிகள்...
அதையும்
ஆனந்த கண்ணீரா?
என்றாள்!

No comments:

Post a Comment