Monday, 23 September 2013

பூந்தளிர்!

அவள்...
செல்லரித்த
இதயத்தில்
சிந்தனை
சுவடுகள்!

அவள்...
வறண்ட
வானில்
திடீர் தூவானம்!


அவள்...
பாலை நிலத்தில்
பட்டென்று பூத்த
ரோசா மலர்!

அவள்...
நினைவிழந்த பின்
நெஞ்சத்தில்
நீந்திய புத்தொளி!

அவள்...
இறந்துவிட்ட
செடியில்
புதிதாய்
தோன்றிய
பூந்தளிர்!

No comments:

Post a Comment