Thursday, 19 September 2013

பிழை...

அவள்...
புதுயுகத்தின்
பூந்தளிர் நெஞ்சம்!

அவள்...
கலியுகத்தின்
கருகிய வரிகள்!

அவள்...
கண்ணுக்குள்
கை வரைந்த
ஓவியம்!

அவள்...
ஓரக்கண்ணில்
ஒட்டிக்கொண்ட
சிறு மணல்!


அவள்...
நாணமும்,
அச்சமும்
ஒன்றாய் கலந்த 
மறை பொருள்!

அவள்...
நிலவுக்குள்
இயற்கை
தந்த கறை!

அவள்...
உலகில்
எவரும் காணாத
பேரின்பம்!

அவள்...
எனது சிந்தனைக்கு
கிடைத்த முதல் பரிசு!

அவள்...
எனது எழுதுகோலின்
நுனியில் தோன்றிய
பிழை...
சொற்கள்!

No comments:

Post a Comment