Saturday, 10 August 2013

சாகத் துடிக்கிறேன்!

அன்பு வழி
உணர்ச்சிக்கு
நான் அடிமை!
பகிர்மானங்கள்
ஊடல்களாய்
மாறினாலும்
கவலையில்லை!

அது
அன்பின் வழியா?
அதனை
சிந்திக்கிறேன்!
நான் என்னையே
நேசிக்கிறேன்!


நான்
என்னுடனேயே
வாழ்கிறேன்!
எனக்காக யாரும் 
அன்பு...
செய்யவில்லை!

உயர்வுகளும்
தாழ்வுகளும்
என்னை...
உருப்பெறாமலா
செய்துவிடும்!

உறுதியாய்
எதிர் நீச்சல்
நீந்துவேன்!
அன்புக்காக
சாகவும்...
துடிக்கிறேன்!

No comments:

Post a Comment