விடையில்லை!
பாம்புத் தோல்
விற்பவனுக்கு
பாம்பின் நஞ்சு
தெரியாமலா
இருக்கும்?
நிலக்கரியை
தோண்டுபவனுக்கு
பூமியின் அபாயம்
அறியாமலா
இருக்கும்?
முத்தெடுக்க
துணிந்தவனுக்கு
கடலின் ஆழம்
உணராமலா
இருக்கும்?
அடையும்
இலக்கை தேடி
செல்பவனுக்கு
செல்லும் வழியில்
சலனம் வந்தால்...
விடையில்லை!
No comments:
Post a Comment