Thursday, 15 August 2013

விடையில்லை!

பாம்புத் தோல்
விற்பவனுக்கு
பாம்பின் நஞ்சு
தெரியாமலா
இருக்கும்?

நிலக்கரியை
தோண்டுபவனுக்கு
பூமியின் அபாயம்
அறியாமலா
இருக்கும்?


முத்தெடுக்க
துணிந்தவனுக்கு
கடலின் ஆழம்
உணராமலா
இருக்கும்?

அடையும்
இலக்கை தேடி
செல்பவனுக்கு
செல்லும் வழியில்
சலனம் வந்தால்...
விடையில்லை!

No comments:

Post a Comment