நான் யாருக்காக...
கோபக் கனலில்
குணமறியா
குருடன் நான்!
தாபக் கதிரின்
தன்னிகரில்லா
இனியன் நான்!
மோகக் கனவின்
முகமறியா
கலைஞன் நான்!
காதல் தோல்வியின்
இருண்ட இதயம்
நான்!
எதை மூட?
எதை திறக்க?
விடை தெரியா
வீணன் நான்!
கண்டும், கேட்டும்,
புரிந்தும், அறிந்தும்,
அனுபவித்தும்...
அதனை வெளியிட
இயலா கோழை
நான்!
நான் யாருக்காக?
No comments:
Post a Comment