Tuesday, 20 August 2013

எழுப்புவாயா?

நீண்ட
தினங்களுக்கு பின்...
முகவரி தேடுகிறேன்!
உறக்கத்தை
உறங்க வைத்துவிட்டு,
நான் கண்
விழித்திருக்கிறேன்!

எண்ணற்ற பெண்களின்
கண்ணீரில்...
நான் காம்பீரம்
கொண்டேன்!


என் கோபக்கனலில்
பல பெண்களை
தொலைத்தும்
விட்டேன்!

அடுக்கடுக்காய்
காதல் அம்புகள்!
மலையாய் இருந்த
நான் நிழலாய்!

இனி சோர்ந்துவிட்ட
சிங்கத்துக்கு காதலை
நிலாச் சோறாய் ஊட்டி,
புத்துணர்ச்சி தந்து
எழுப்புவாயா?

No comments:

Post a Comment