Monday, 19 August 2013

எதிரியான சோகம்!

ஊஞ்சலில்
உட்கார்ந்து
உறங்கிவிட்டு,
எழுந்த பின்
என்ன சோகம்


செயல்படும்
நேரத்தில்
சரியாக...
இல்லையெனில்
ஊஞ்சல் கூட
தூக்கு கயிறாய்
மாறும்!

தயக்கம்
தன்மானத்திற்கு
விருந்தாகுமா?

வெல்லக்கட்டிக்கு
சிற்றெறும்பு கூட
எதிரியான சோகம்!

No comments:

Post a Comment