கதிரவனாய்....
உதிரம் கொதிக்கிறது
உயிர் சிரிக்கிறது!
உறவு ஓலமிடுகிறது
பிரிவு தவிக்கிறது!
ஊண் உறங்குகிறது
சல்லாபம் துளிர்க்கிறது!
பசுமை ஒளிர்கிறது
கருமை அழைக்கிறது!
நான் ஏங்குகிறேன்
அவள் தவிக்கிறாள்!
அரவணைப்பு எங்கே?
அன்பு பாய்கிறது!
நான்...
மூடிய முகிலுக்குள்
முகம் மறைத்த
கதிரவனாய்!
No comments:
Post a Comment