Saturday, 3 August 2013

விழித்த பின்...

கூர்ந்து
பார்த்ததில்
சோகம்
தெரிந்தது!

சோர்ந்து
படுத்ததும்
மோகம்
தவித்தது!

கனவு
கண்டதும்
வேகம்
தனிந்தது!


உறவு
கொண்டதில்
உண்மை
புரிந்தது!

உரசிக்
கொண்டதும்
தன்மை
விளைந்தது!

தவிப்பு
வந்ததும்
ராகம்
வைத்தது!

விழிப்பு
வந்ததும்
தாகம்
தனிந்தது!
அவளின்
மோகம்...
குறைந்தது!

No comments:

Post a Comment