Friday, 16 August 2013

அதிகம் தேவை!

மாசு படிந்த
ஓவியம் என்று
தூய்மை செய்தேன்,
அதுவோ உயிர்பெற்று
சின்ன முத்தம் தந்தது!


உடைந்த கண்ணாடி
என்று உதறி தள்ளினேன்,
அதுவோ,
எனது பல
கோணங்களையும்
பிரதிபலித்தது!
 
தேவையில்லை
என்று தெளிவாய்
இருந்தேன்,
ஆனால்...
தெவிட்டாத தேனாய்
மேலும் தேவையானது!

No comments:

Post a Comment