கட்டிய
கோவணச்சுவடு
அழியுமுன்னே,
ஆண்மையின்
பிரவாகம்!
ஒட்டிய
உடலாடை
கலையுமுன்னே,
உடல் உணர்ச்சிகளின்
புது முயற்சி!
சிந்திய
கண்ணீர்
சிதறுமுன்னே,
சின்னதாய்
சிரிப்பு!
கட்டிய
கணவனின் நிழல்
மறையுமுன்னே
உடல் தூண்டலின்
சல்லாபம்!
முட்டிய
வேதனை
தொலையுமுன்னே,
அடுத்தவனுக்கு
வேதனை மூட்ட
பெருமூச்சு!
வெட்டிய
காயம்
ஆறுமுன்னே,
அவசரமாய்
தோன்றும்
உயிர் பலி!
கலங்கிய
கருவின் காயம்
ஆறுமுன்னே,
புதியதோர் உயிர்
தோன்றலுக்கு
அடிச்சுழி!
உறங்கிய
கண்கள்
விழிக்குமுன்னே,
பிறர் வாழ்விற்கு
தேடும் இருட்டு!
வடித்த
கவிதை
படிக்குமுன்னே,
எழுதுகோலுக்கு
தோன்றிய
புல்லுறுவிகள்!
மனிதனின் அவசரம்!
கோவணச்சுவடு
அழியுமுன்னே,
ஆண்மையின்
பிரவாகம்!
ஒட்டிய
உடலாடை
கலையுமுன்னே,
உடல் உணர்ச்சிகளின்
புது முயற்சி!
சிந்திய
கண்ணீர்
சிதறுமுன்னே,
சின்னதாய்
சிரிப்பு!
கட்டிய
கணவனின் நிழல்
மறையுமுன்னே
உடல் தூண்டலின்
சல்லாபம்!
முட்டிய
வேதனை
தொலையுமுன்னே,
அடுத்தவனுக்கு
வேதனை மூட்ட
பெருமூச்சு!
வெட்டிய
காயம்
ஆறுமுன்னே,
அவசரமாய்
தோன்றும்
உயிர் பலி!
கலங்கிய
கருவின் காயம்
ஆறுமுன்னே,
புதியதோர் உயிர்
தோன்றலுக்கு
அடிச்சுழி!
உறங்கிய
கண்கள்
விழிக்குமுன்னே,
பிறர் வாழ்விற்கு
தேடும் இருட்டு!
வடித்த
கவிதை
படிக்குமுன்னே,
எழுதுகோலுக்கு
தோன்றிய
புல்லுறுவிகள்!
மனிதனின் அவசரம்!
.jpg)
No comments:
Post a Comment