Tuesday, 9 April 2013

உயிர் வடுக்கள்!

பாலைவனத்தில்
புதிதாய் தோன்றிய
பசுந்தளிர்!

இறந்த பின்னும்
எழுந்து நடந்த
என் உயிர்
வடுக்கள்!

ஆறிய புண்ணில்
அடிக்கடி
விளையாடும்
ஊசி முனை!

அவளின்
நினைவுகள்...
மறந்த
நிலையிலும்
வேதனை
சிரிப்புகள்!

வெப்பமாய்
கொதித்திடும்
என் உதிரத்துளிகள்,
வெடித்து சிதறும்
நாள் எப்போது?


No comments:

Post a Comment