Thursday, 25 April 2013

ஓர் இரவில்...

தவளைகள்
தன் துணை
தேடி செய்யும்
ஆர்பாட்ட
குரல்கள்!

ஒரு கூண்டில்
தனித்திருக்கும்
பறவைகளின்
பரிதவிப்பு!

நாளெல்லாம்
பிச்சை எடுத்து
ஒரு மூலையில்
உறங்க தவிக்கும்
நிலை கெட்ட
மனிதர்கள்!

உல்லாசமாய்
இன்பமாய்
இரவை
அனுபவிக்க
துடிக்கும்
புத்தம்புது
தம்பதிகள்!

இரவு
ஏன் வந்தது
என தவிக்கும்
சின்னஞ்சிறு
காதலர்கள்!

காச நோயின்
கெடுபிடியில்
கதற கதற
இருமி...
சிந்தனை மறந்த
செம்மல்கள்!

நாளைய
எதிர்காலம்
எண்ணி,
ஏங்கி தவிக்கும்
உயர் மனிதர்கள்!

மொத்தத்தில்
ஓர் இரவு
இயற்கையின்
ஏக்கத்தில்
சிக்கி தவிக்கும்
போராட்டம்!

No comments:

Post a Comment