Saturday, 27 April 2013

ஈசல்கள்!

வாழ்வின்
காலத்தை
ஒருதுளியும்
எண்ணாமல்,
இருபத்து நான்கு
மணி நேரம்தான்
வாழ்கை என்று
தெரிந்து,
பறந்து,
திரிந்து,
ஆழ்ந்து,
குலாவி,
உயிர்விடும்
ஈசல்களே!

மனிதனுக்கு
பாடமாய்
கூறுங்கள்!

காலம் கருதி
அவசரமாய்
வாழ்வின்
உணர்ச்சிகளை,
அழிக்க வேண்டாம்
என்று...

இருக்கிற காலத்தில்
இனிமையாய்
வாழ வேண்டும்
என்று...
அறை கூவுங்கள்!

No comments:

Post a Comment