Wednesday, 10 April 2013

ஒரு தலைப்பு இரண்டு கவிதைகள்! 1. பெண் (புகழ்ந்து)

பெண்!
புரட்சி படைப்பின்
புதுமை புயல்!

ஆணின்
ஆணவத்தில்
அடங்கி தவிக்கும்
அற்புதம்!

கோணல் புத்தி
கொண்டாலும்
கொண்டவனை
மறவா நல்லினம்!

தாமரை மலரினும்
மெல்லிய இதயம்!
ஆம்! அவசரமாய்
வரும் கண்ணீர்
துளிகள்!

வரதட்சனை
கொடுமைக்காக
அழிக்கப்படும்
பெண்ணினம்,
நாளை நமக்கு
கிடைக்கவிருந்த
தமிழனின் தாய்!

காதல் கொண்டாலும்,
காதலனை நெஞ்சத்தில்
செதுக்கிவைத்து
வாய் மூடி,
ஊமையாய்...
பண்பாடு என்ற
பெயரால்
அடுத்தவனுக்கு
மனைவியாய் வாழும்
அமைதி பூங்கா!

சாகும் வரை
பிறரை பாதுகாக்க
தன்னை அழிக்கும்
மெல்லினம்!

சோகத்தை
உள்ளே வைத்து
அடுத்தவனின்
தாகத்திற்காக
சிரித்திடும்
தியாகச்சுடர்கள்
பெண்கள்!

No comments:

Post a Comment