Tuesday, 9 April 2013

பயணம்!

சுட்ட வடுக்களின்
தொலை தூர
பயணம்!

பாவக் கரங்களின்
அணி வகுத்த
ஆரவாரம்!

இடைவெளியில்லா
இன்னல்களின்
துள்ளல்கள்!

வண்ணக் கனவுகளின்
வழி தவறிய
இலக்கு!

சொல்லத் துடித்தாலும்
சொல்ல முடியாத
இதயக் கலவரங்கள்!

என் கண்களின்
முன்னே
காட்டுத் தீ!

மீண்டும்...
ஆழ்ந்து சிரிக்கிறேன்!
என் பயணம்
தொடர்கிறது!


















No comments:

Post a Comment