Thursday, 11 April 2013

நேருக்கு மாறாய்...

மகிழ்ச்சியில் நான்
குதூகலித்தேன்,
மனித வெடிகுண்டாய்
அவள்!

சுகம் கண்டு நான்
தத்தலித்தேன்,
சுட்டெரிக்கும்
கதிரவனாய்
அவள்!

வீரம் கொண்டு நான்
வெகுண்டெழுந்தேன்,
சோகம் தரும்
அரங்கமாய்
அவள்!

பலமிழந்து நான்
துவண்டு போனேன்,
துள்ளியெழும்
மானாய்
அவள்!

தோல்வியில் நான்
சோர்ந்து போனேன்,
எல்லையில்லா
மகிழ்ச்சியில்
அவள்!

யார் அவள்?
எனது காதலுக்கு
காத்திருப்பவள்!

No comments:

Post a Comment