Thursday, 18 April 2013

இமைக்க மறந்து...

இமை பொழுதும்
உறங்காமல்,
இரவு பகல்
பாராமல்,
இனிமை
அனைத்தும்
துறந்து,
குமட்டி,
சுமந்து,
சோர்ந்து,
களைத்து,
பெற்றெடுத்த
உன்னை
இதோ...
உற்று பார்க்கிறேன்!

நீ இமைக்க
மறந்தாய்!
ஆம் நீ!
இறந்து பிறந்தாய்!

இனியும்
என் இமைகளுக்கு
ஓய்வில்லை,
கண்ணீரை
சுமக்க போகிறேன்
வேதனையின்
விளிம்பில்!

No comments:

Post a Comment