கைக்குழந்தையாய்
வாய்விட்டு சிரி!
ஒட்டு துணிகூட
இல்லாமல்
சிறு வாழ்வு நடத்து!
உன் வியர்வையின்
வருமானத்திற்காக
காத்திருக்கும்
நரிக்கூட்டத்தின்
தாலாட்டை கேள்!
பெண்ணே!
சிறிது நேரம்
ஆண் மகவாய்
இருந்து பார்!
அருமை தெரியும்!
பெரியவனாய் வளர்!
தறி கெட்டு போ!
மனதை பறி கொடு!
மாராப்பில்
புதைந்திருக்கும்
புதையல் தேடு!
சலனப்படு!
சந்தததியிடம் நசுங்கு!
நங்கையின் நஞ்சுக்கு
கை கொடு!
காதல் செய்!
தாடி வளர்!
எதிர் வாழ்வின் முன்
திரையிட்டு நில்!
பெண்ணே!
இளைஞனாயும்
இருந்து பார்!
அவனது அவதி
உனக்கு தெரியும்!
மல்லிகை பூ வாங்கி போ!
மனைவியின் ஏக்கத்திற்கு
ஈடு கொடு!
குழந்தையின் கொஞ்சலில்
உறவாடு!
அலுவலக வியர்வையை
அடிக்கடி துடை!
பனிரெண்டு மணிக்கும்
பூபாளம் பாடு!
பொருணி பேசும் உலகிற்கு
உயர்வாய் நில்!
நாளை நிச்சயமில்லை
எழுந்து போ!
பெண்ணே சற்று நேரம்
கணவனாய் வாழ்ந்து பார்!
நிச்சயமாய்! அதுவும்
முடியாது!
கிழவியின் மாராப்பில்
கை சுத்தம் செய்!
நரைத்த பிறகும்
குடும்பம் தாங்கு!
ஓய்வு நேரத்தில்
ஊர் வம்பு பேசு!
கடந்த வாழ்வை
அசை போட்டு பார்!
உருவத்திற்கு
புது பொலிவு கொடு!
உறவுகளை மெருகேற்று!
நாளைய தோன்றலுக்கு
வழி வகை செய்!
பெண்ணே! இப்போதும்
உன்னால் முடியாது
ஆணின் அருமை
தெரிந்து கொள்ள!
ஆணாய் பிறக்காதே!
அவதிப்பட்டு வாழாதே!
வாய்விட்டு சிரி!
ஒட்டு துணிகூட
இல்லாமல்
சிறு வாழ்வு நடத்து!
உன் வியர்வையின்
வருமானத்திற்காக
காத்திருக்கும்
நரிக்கூட்டத்தின்
தாலாட்டை கேள்!
பெண்ணே!
சிறிது நேரம்
ஆண் மகவாய்
இருந்து பார்!
அருமை தெரியும்!
பெரியவனாய் வளர்!
தறி கெட்டு போ!
மனதை பறி கொடு!
மாராப்பில்
புதைந்திருக்கும்
புதையல் தேடு!
சலனப்படு!
சந்தததியிடம் நசுங்கு!
நங்கையின் நஞ்சுக்கு
கை கொடு!
காதல் செய்!
தாடி வளர்!
எதிர் வாழ்வின் முன்
திரையிட்டு நில்!
பெண்ணே!
இளைஞனாயும்
இருந்து பார்!
அவனது அவதி
உனக்கு தெரியும்!
மல்லிகை பூ வாங்கி போ!
மனைவியின் ஏக்கத்திற்கு
ஈடு கொடு!
குழந்தையின் கொஞ்சலில்
உறவாடு!
அலுவலக வியர்வையை
அடிக்கடி துடை!
பனிரெண்டு மணிக்கும்
பூபாளம் பாடு!
பொருணி பேசும் உலகிற்கு
உயர்வாய் நில்!
நாளை நிச்சயமில்லை
எழுந்து போ!
பெண்ணே சற்று நேரம்
கணவனாய் வாழ்ந்து பார்!
நிச்சயமாய்! அதுவும்
முடியாது!
கிழவியின் மாராப்பில்
கை சுத்தம் செய்!
நரைத்த பிறகும்
குடும்பம் தாங்கு!
ஓய்வு நேரத்தில்
ஊர் வம்பு பேசு!
கடந்த வாழ்வை
அசை போட்டு பார்!
உருவத்திற்கு
புது பொலிவு கொடு!
உறவுகளை மெருகேற்று!
நாளைய தோன்றலுக்கு
வழி வகை செய்!
பெண்ணே! இப்போதும்
உன்னால் முடியாது
ஆணின் அருமை
தெரிந்து கொள்ள!
ஆணாய் பிறக்காதே!
அவதிப்பட்டு வாழாதே!
.jpg)


No comments:
Post a Comment