Tuesday, 2 April 2013

உன் முகம் காட்டு!

மனிதனே
உன் மனத்திரையை
கிழித்தெறிந்துவிட்டு
வெளியே வா!

உன்னால்
உரு பெறத் துடிக்கும்
பிரச்சனைகள்
ஏராளம்!

உனக்குள்ளே
பூட்டி வைத்த
உன் எதிர்காலம்
முழுமை பெற
வேண்டாமா?

உன் எதிரியின்
தாக்குதல்
உடன் மறைய
வேண்டாமா?

உன் உறவின்
ஓலங்களை
செப்பனிட
வேண்டாமா?

உன் சிந்தனை
சிதறல்கள்
உலகிற்கு தெரிய
வேண்டாமா?

உன் அன்பின்
எக்கம்
சீர் பெற
வேண்டாமா?

உன் காதலின்
தாகம்
புதுப்பொலிவு பெற
வேண்டாமா?

உன் வாழ்க்கை
சக்கரம்
முழு சுழற்சி பெற
வேண்டாமா?

உன்னால்...
உன் மனத்தின்
மாயத்திரையை
கிழித்தெறிய
முடியும்!

வெளியே வா
உலகிற்கு
உன் முகம்
காட்டு!

No comments:

Post a Comment