Wednesday, 10 April 2013

ஒரு தலைப்பு இரண்டு கவிதைகள் - 2.பெண் (இகழ்ந்து)

பூந்தளிர் மஞ்சத்தில்
தடம் புரண்ட
இயற்கை!

அய்ம்புலன்களையும்
ஆட்டுவிக்கும்
அற்புத கருவி!

ஆணினத்தின்
கல்லறைகளுக்கு
காவல் செய்யும்
அன்பு ஆத்மாக்கள்!

அழகு மிகு
வானவில்லில்
இடம் பெறாத
கருமை நிறம்!

உள்ளுக்குள்
வஞ்சனையை
அடக்கிவைத்து,
வெளியில்
அமைதி காட்டும்
சமாதான புறா!

பெண் மனசு
ஆழமென்றால்
அது பழமை!
ஆணை அழிக்கும்
தாகம் மட்டுமே
பெண்ணின் புதுமை!

ஆர்பாட்ட
பெண்களின்
அவசரத்தால்
சிலர் கவிஞன்!
பலர் அறிஞன்!
ஆனால் நான்...
முரடன்!

வானத்தில்
வட்டமிடும்,
ஆண்களை காதலால்
அழிக்க திட்டமிடும்,
பிணம் தின்னும்
கழுகுகள் ...
நாம் போற்றும்
பெண்கள்!

No comments:

Post a Comment