Tuesday, 23 April 2013

இருளின் மடியில்...

ஓ!
இருளென்னும்
வலையில்
அகப்பட்டு
துடிக்கும்
என்னை...
அகற்றுவதற்கு
கடும் போட்டியா?

நிலவே! நீயும்
தேவையில்லை!
கதிரவனே! நீயும்
தேவையில்லை!

இருள்...
இனி எனக்கு
பயமில்லை!
இனி நான்
இருளின் மடியில்
தவழப் போகிறேன்!

இதோ...
உதறிவிட்டேன்!
முடிவும்
செய்துவிட்டேன்!
எதிர்காலம்
தேவையில்லை!
விடியலும்
வேண்டியதில்லை!


No comments:

Post a Comment