Monday, 29 April 2013

அழுக்கு!

பளிச்சிடும்
வெண்மையிலும்
துளிர்த்திடும்
அழுக்கு!

மனிதனின்
மனதை
இடித்திடும்
இன்னல்!

மனிதன் கட்டும்
மாளிகையில்
விரிசல்!
கேளிக்கை!

உணர்வுக்கு
வலைவிரித்து
உணவுக்கு தரும்
இடைஞ்சல்!
பிச்சை!

குணத்துக்கு
உயர்வு செய்து,
பணத்துக்கு
செய்யும்
கொலை!
உயிர்பலி!

உழவுக்கு
வரும் நீரை
உடமைக்கு
நஞ்சாக்கி
மகிழ்ச்சி!
நாகரிகம்!

பஞ்சனையில்
வரும் பரிதவிப்பு
பகல் நேரத்தில்
உல்லாசம்!
கற்பழிப்பு!

பாதகனுக்கு
கைகோர்த்து,
நண்பனுக்கு
செய்யும்
உயிர் வதை!
வஞ்சகம்!

பளிச்சிடும்
நிலவிலும்
அழுக்கு!
பகட்டான
மனிதனிலும்
அழுக்கு!

மனித நேயம்!
மனிதனின்
அழுக்கை
போக்கட்டும்!


No comments:

Post a Comment