Tuesday, 16 April 2013

கிடைக்காத பூக்கள்! ( கிராமிய நடை)

ஆவாரம்பூ
பறிக்கயிலே,
ஆடு மாடு
மேய்க்கயிலே,
அருகருகாய்
நின்னவளே!

ஆத்தோரம் நான்
காத்து நிக்க
குளிச்ச மேனி
குறையாம,
குன்று போல
நின்னவளே!

பாக்கு மர
தோப்புக்குள்ள
நான் பரிதவிச்சி
நிக்கயில
பட்டுனு ஓடிவந்து
சின்ன முத்தம்
கொடுத்தவளே!

ஆசயாய் ஓடிவந்து
உன்ன கட்டிக்க
கூப்பிட்டா,
அத்திப்பூ பறிக்க
என்னயும்
கூப்பிட்டதேன்?

நான் வளத்த
ரோசாவே!
புத்தி கெட்டு
போகாம,
நம்பி என்ன
கட்டிக்கடி!
நாள் முழுசும்
சிரிச்சிக்கடி!

No comments:

Post a Comment