கனியட்டும்...
மலர் சோலை
பல கூவி
கொட்டும் பனி
சொட்ட சொட்ட,
என்னை முத்தமிட்ட
தேனீக்களே!
தேன் மட்டும்
உங்களுக்கு
தந்துவிட்டதால்,
என் பணி
முடியவில்லை!
நான் கனியாகும்
காலம் வரை
காத்திருந்து
வண்டு வந்து
சுவைத்த பின்னே,
என் முழு பலனும்
முற்றுப் பெறும்!
கனியட்டும்
காத்திருக்கிறேன்!
No comments:
Post a Comment