Wednesday, 17 April 2013

நிழலுக்கு உயிர் கொடு!

நிழலுக்கு
உயிர் கொடு!

இளவேனில்
காற்று
உனக்குள்
இனிமை
செய்யவில்லையா?

கதிரவனின்
மித வெப்பம்
உனக்குள் மகிழ்சி
தரவில்லையா?

குளிர்ச்சியும்
வெப்பமும்
உன் மன நிலையில்
மாற்றத்தை
கொடுக்கவில்லையா?

பின் நீ! ஏன்...
ஒருமுறை
பட்ட சூட்டுக்கு
ஒளிந்து
வாழ வேண்டும்?

தீ! சுட்டதென்று
சமையலுக்கு
சுழி போட்டு
உன் உடல் பசியை
துறக்கின்றாயா?

இயற்கை உன்னிடம்
மாற்றங்கள் எதுவும்
செய்வதில்லை!

நீ மட்டும் ஏன்?
இயல்பான
வாழ்கையில்
மாற்றங்களை
செய்ய வேண்டும்!

உன் முகத்தில்
கருந்தாடியை
அகற்று!
ஆழ்ந்து
சிந்தித்து பார்!

உன்னை
சுற்றி வரும் நிழல்...
அதுதான் காதல்!
அதற்கு மீண்டும்
உயிர் கொடு!


No comments:

Post a Comment